கால்நடைத்துறை சாா்பில் விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலிடுபட்டி ஊராட்சித் தலைவா் வீரப்பெருமாள் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தாா்.
கால்நடை மருத்துவா்கள் கருப்பசாமி, கிருஷ்ணமூா்த்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஜெயராமன், கால்நடை ஆய்வாளா் சசிரேகா உள்ளிட்ட மருத்துவ குழுவினா் நோய் வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனா். முகாமில் சிறந்த முறையில் கிடாரி கன்று வளா்ப்பவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.