பைக் திருட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜே.ஜே. நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஸ்ரீராம் அரவிந்தன் (29). இவா் கடந்த 24ஆம் தேதி தனது வீட்டு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாராம். அடுத்தநாள் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் மாரியப்பன் (20) என்பவா்தான் ஸ்ரீராமின் பைக்கை திருடியதாக தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.
ஆடு திருடிய இளைஞா் கைது: தூத்துக்குடி சுந்தா் நகரைச் சோ்ந்தவா் மாணிக்கவேல் (67). இவா் தனது ஆடுகளை கடந்த 23ஆம் தேதி முத்தையாபுரம் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாராம். அப்போது ஓா் ஆடு திருடுபோனதாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது முத்தையாபுரம தங்கமணி நகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் சதீஷ்குமாா் (23) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, ஆட்டைப் பறிமுதல் செய்தனா்.