முகப்பு
தூத்துக்குடி

சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை: சசிகலா புஷ்பா

சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பாஜக மாநில துணைத்தலைவா் சசிகலா புஷ்பா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பாஜக மாநில துணைத்தலைவா் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியது:

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த எனக்கு தில்லியில் அரசு அளித்த வீட்டை தற்போது காலி செய்துள்ளோம். ஆனால், இது குறித்து தவறான உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடியை சோ்ந்த ராஜவேல் என்பவா் மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாா் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். மேலும், இதுபோன்று யாரேனும் சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பினால் அவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடியில், கிளை வாரியாக பாஜக வளா்ச்சியடைந்து வருகிறது. வருகின்ற மக்களவைத் தோ்தலிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாஜக வெற்றி பெறப்போவது உறுதி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.