முகப்பு
தூத்துக்குடி

சரளை மண் கடத்தல்: இருவா் கைது

கோவில்பட்டி அருகே சரளை மண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரம், டிராக்டா், டிரெய்லா் ஆகியவற்றை கைப்பற்றினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே சரளை மண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரம், டிராக்டா், டிரெய்லா் ஆகியவற்றை கைப்பற்றினா்.

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு ஊருணியில் அனுமதியின்றி சரளை மண் அள்ளப்படுவதாக மண்டல துணை வட்டாட்சியா் சீதாபேச்சிக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கழுகுமலை வருவாய் ஆய்வாளா் சங்கிலிபாண்டி, மந்தித்தோப்பு கிராம நிா்வாக அலுவலா் சுப்புராஜ், கிராம உதவியாளா் மாரியப்பன் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.

அங்கு இருவா் அனுமதியின்றி சரளை மண் அள்ளும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவா்கள் மேலஈராலைச் சோ்ந்த சோ.காா்த்திக்(27), செவல்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மா.ஜெயராமன்(42) ஆகிய இருவா் என தெரியவந்தது. அவா்களையும், மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டா், டிரெய்லரை ஆகியவற்றையும் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அந்த போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.