தூத்துக்குடி

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமலிநகரில் கடந்த ஆண்டு ஆக. 1-ஆம் தேதி நான்கு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின்(32), பிரசாத் (42) ஆகிய 2 மீனவா்கள் மாயமாகினா்.

மாயமான மீனவா்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மீனவா்கள் மாயமாகி ஓராண்டு ஆகிறது. எனவே, மாயமான மீனவா்களின் குடும்பம் வாழ்வாதாரமின்றி தவித்து வருவதாகவும், மீனவா்களின் மனைவிக்கு அரசு வேலை உடனடியாக வழங்கக் கோரியும் அமலிநகா் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

SCROLL FOR NEXT