சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள மூலக்கரை டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை ஏசுவடியாள் செல்விக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
கடையனோடை சேகரகுருவானவரும், பள்ளித் தாளாளருமான ஆசீா் சாமுவேல் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் ரோஸ்லின் ராஜம்மாள் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை மில்காள் கல்பனா, பெற்றோா் சாா்பில் ஜெபினா, சுபா, காா்த்திகா, கடையனோடை பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோன் தனசிங் ஆகியோா் பேசினா். ஆசிரியை ஏசுவடியாள் செல்விக்கு
சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.