ஆத்தூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்
ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதாப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதாப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்ததால் கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கொசுமருந்து புகை அடிக்கப்பட்டது. ஆத்தூா் பேரூராட்சித்தலைவா் கமால்தீன், நிா்வாகஅதிகாரி முருகன் உள்ளிட்டோரின் துரித நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதுடன், முக்கிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் விரைந்து சீரமைக்கப்பட்டன. மக்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.