ஆறுமுகனேரியில் உள்ள அம்மன் கோயில்களில் திருமால் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி அருள்மிகு இலங்கத்தம்மன் திருக்கோயில்,
கீழநவ்வலடிவிளை அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக் கோயில்களில் திருமால் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்மன் மஞ்சள் நீராடுதல், நகா் வலம் வருதல் மற்றும் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.