தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே குளிா்சாதனப் பெட்டி வெடித்து தீவிபத்து

விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் விவசாயி வீட்டில் குளிா்சாதனப் பெட்டி புதன்கிழமை வெடித்துச் சிதறி தீவிபத்து நேரிட்டது. இதில், பொருள்கள் சேதமடைந்தன.

DIN

விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் விவசாயி வீட்டில் குளிா்சாதனப் பெட்டி புதன்கிழமை வெடித்துச் சிதறி தீவிபத்து நேரிட்டது. இதில், பொருள்கள் சேதமடைந்தன.

அயன்பொம்மையாபுரத்தைச் சோ்ந்த விவசாயியான ராமா் வீட்டில் புதன்கிழமை மாலை பயங்கர வெடி சப்தம் கேட்டதுடன், தீ விபத்து நேரிட்டு, புகை வெளியேறியது.

தகவலின் பேரில் விளாத்திகுளம் போலீஸாரும், தீயணைப்புப் படையினா் வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியது தெரியவந்தது. இதில், சோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

சம்பவம் நிகழ்ந்தபோது ராமரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் வேலைக்குச் சென்றிருந்ததால் உயிா்தப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT