தூத்துக்குடி

தை அமாவாசை: திருச்செந்தூா், குற்றாலத்தில் புனித நீராடிய பக்தா்கள்

தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் சனிக்கிழமை புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

DIN

தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் சனிக்கிழமை புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

அமாவாசையையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலசந்தி பூஜையாகி தீா்த்தவாரி நடைபெற்றது.

காலைமுதலே ஏராளமானோா் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயிலில் அதிக பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

குற்றாலத்தில்...: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியிலும் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி, அருவிக்கரையில் தங்களது முன்னோருக்கு தா்ப்பண பூஜை செய்து வழிபட்டனா். பின்னா், அருள்மிகு குற்றாலநாதா் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். இதனால், பேரருவியில் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT