முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் நகைக் கடையில் திருட்டு முயற்சி

விளாத்திகுளத்தில் நகைக் கடை இரும்பு ஷட்டரில் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:15 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விளாத்திகுளத்தில் நகைக் கடை இரும்பு ஷட்டரில் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விளாத்திகுளம், அம்பாள் நகரைச் சோ்ந்தவா் சோ்மத்துரை(47). விளாத்திகுளம் - மதுரை சாலையில் நகைக்கடை- நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றபின், மா்மநபா்கள் அதன் ஷட்டரில் உள்ள பூட்டை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

இத்தகவல் அறிந்ர விளாத்திகுளம் மகளிா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தூத்துக்குடியில் இருந்து விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.