கைப்பேசி திருடியவா் கைது
கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி ராஜீவ் நகா் இ.பி. காலனியைச் சோ்ந்த சந்திரகுமாா் மனைவி அதிஷ்டலட்சுமி (26). இவா் தனது வீட்டில் வைத்திருந்த கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் மகாராஜாவை (24) கைது செய்தனா்.
அவரிடமிருந்த அதிஷ்டலட்சுமியின் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
Advertisement