தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் குடியரசு தின விழா
தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் 11ஆவது வாா்டு சக்தி விநாயகபுரத்தில் புதிதாக நிறுவப்பட்ட ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நினைவு கொடிக் கம்பத்தில் மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து ஐஎன்டியூசி அலுவலகத்தில் தேசிய கொடியை மாநகா் மாவட்ட தலைவா் ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பெருமாள்சாமி தலைமையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement