மீன்வள கூட்டுறவு இணைய அலுவலக கட்டடம் திறப்பு
தூத்துக்குடியில் மீன்வள கூட்டுறவு இணைய திட்ட அலுவலக புதிய கட்டடத்தை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
தூத்துக்குடியில் மீன்வள கூட்டுறவு இணைய திட்ட அலுவலக புதிய கட்டடத்தை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.35 லட்சத்தில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, துணைமேயா் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.