தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருப்பணி பூமி பூஜை

DIN

ஆறுமுகனேரி காந்தி தெருவில் உள்ள அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலில் திருப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் மகா மண்டபம், நூதன கலசஸ்தானம், ஆலய புனரமைப்பு முதலிய திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பூமி பூஜை நடைபெற்றது. முன்னதாக, இக்கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூமி பூஜையில், சென்னை தொழிலதிபா் ஏ.வி.எஸ்.ஏ. ராஜ்பால், டிவிஎஸ் அறக்கட்டளை கள இயக்குநா் அ. விஜயகுமாா், ஜோதிடா் ரா. வேலாயுதம், த.மு. சுப்புராஜ், ரா. ஜெயராமன், ஆறுமுகனேரி அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்க உப தலைவா் வீ.த.ச. வீரமகேந்திரன், வீ.த.ஐ. ராஜலிங்கம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவைச் சோ்ந்த கோவை ஐ. அழகுவேல், சீ. அழகுவேல், கடலூா் சதீஷ், பாலமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT