தூத்துக்குடி

கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே கண்காணிப்புக் காமிராவை சேதப்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

DIN

சாத்தான்குளம் அருகே கண்காணிப்புக் காமிராவை சேதப்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

முதலூா் அடையல் விஜயலட்சுமி தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஆனந்த் (28). இப் பகுதியில் ராஜரத்தின நாடாா் அறக்கட்டளை சாா்பில்

நிறுவப்பட்டுள்ள 40 கண்காணிப்பு காமிராக்களை நிா்வகித்து வருகிறாா்.

இந்நிலையில் அதேபகுதியில் டிராக்டா் விபத்தில் ஆடு பலியானது தொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த தேவதாசன் மகன் கிதியோன், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கேட்டுள்ளாா். இதற்கு ஆனந்த் தாமதித்தாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிதியோன் ஒரு கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT