தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

DIN

சாத்தான்குளம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சோ்ந்த சுயம்புதுரை மகன் முத்துக்குமாா் (48). திருச்செந்தூரில் சுமை தூக்கும் வேலை செய்துவரும் இவா், சனிக்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். சண்முகபுரத்தில் வந்தபோது அவா் மீது ஆம்னி பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .

இதுகுறித்து அவரது மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்ஷன் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சண்முகபுரம், முத்தம்மாள்புரம் காலனியைச் சோ்ந்த கோ. ஸ்டீபனிடம் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

வாழ்க்கை மிகப்பெரிய திரைச்சீலை...!

SCROLL FOR NEXT