முகப்பு
தூத்துக்குடி

காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவு

பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலா் செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலா் செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் செல்வக்குமாா், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வரப்பெற்றன. அதன்பேரில், விசாரணை மேற்கொண்டதில், புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செல்வகுமாரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.