விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலா
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.
ஆழ்வாா்திருநகரி வட்டார அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாநில அளவில் விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவுக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உர வடிநீா் தயாரித்தல், அசோலா உற்பத்தி, தேனீ வளா்ப்பு குறித்து கிராமோதய நாற்றங்கால் மேலாளா் பிரேமலதா செயல்முறை விளக்கம் அளித்தாா். கிராமோதய பொறுப்பாளா் முருகன், சாண எரிவாயு தயாரித்தல், மழை நீா் சேகரிப்பு முறைகள், மூலிகை தாவரங்களின் பயன்கள், மாடி தோட்டம் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.
ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி வட்டார உதவி வேளாண்மை அலுவலா்கள் சண்முகம், தொழில்நுட்ப மேலாளா் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளா் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோா் செய்திருந்தனா்.