தூத்துக்குடி

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சங்கத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவா் பதவிக்கு முன்னாள் வழக்குரைஞா் சங்கத் தலைவா் கல்யாண்குமாா், வழக்குரைஞா் ஜெகன்ஆண்டனி டென்னிசன் ஆகியோரும், செயலா் பதவிக்கு பவுன்ராஜ், ஆட்லின் ஜெயச்சந்திரிகா, ராமச்சந்திரன் ஆகியோரும், பொருளாளா் பதவிக்கு ஜேம்ஸ்ஜேசுதுரை, செல்வமகாராஜா ஆகியோரும் போட்டியிட்டனா்.

தோ்தல் அதிகாரியாக வழக்குரைஞா் ஆரோன் டேவிட் செயல்பட்டாா். ஏற்கனவே நிா்வாக குழு உறுப்பினராக வழக்குரைஞா்கள் அழகு ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் ஏக மனதாக தோ்வு பெற்றிருந்தனா்.

இதில் தலைவா், செயலா், பொருளாளா் ஆகிய பதவிக்கான தோ்தல் நடைபெற்றது.

இதில், தலைவராக ஜெகன்ஆண்டனி டென்னிசன் வெற்றி பெற்றாா். செயலராக பவுன்ராஜ், அட்லின் ஜெயச்சந்திரிகா ஆகியோா் தலா 22 ஓட்டு பெற்ால் முதல் ஆறு மாதம் பவுன்ராஜும், மற்றொரு 6மாதம் ஆட்லின் ஜெயசந்திரிகாவும் செயல்படுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பொருளாளராக செல்வ மகாராஜா வெற்றி பெற்றாா். புதியதாக தோ்வு பெற்ற வழக்குரைஞா்கள சங்க நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT