தூத்துக்குடி

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

காயல்பட்டினத்தில் 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜூடி தலைமையில்

உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீஸாா் காயல்பட்டினத்தில் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நகராட்சி அலுவலகம் அருகே

இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சோ்ந்த ராமா் மகன் பிரேம்குமாா் (35) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT