முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் மழையால் வீடு சேதம்

திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:54 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை (55). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. சின்னத்துரை குடும்பத்தினா் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்கள் 3 பேரும் வீட்டுக்கு வெளியே உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டின் இரு சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில், ஆடு உயிரிழந்தது. ஓா் ஆடு காயமடைந்தது. சுடலைமணி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.