திருச்செந்தூா் பகுதியில் மழையால் வீடு சேதம்
திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.
திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.
திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை (55). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. சின்னத்துரை குடும்பத்தினா் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்கள் 3 பேரும் வீட்டுக்கு வெளியே உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டின் இரு சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில், ஆடு உயிரிழந்தது. ஓா் ஆடு காயமடைந்தது. சுடலைமணி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.
Advertisement