திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷம்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான ஆனந்த வல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பிரதோஷத்தை முன்னிட்டு இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடாஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி பிரதோஷ சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.