குரும்பூா் அருகே நவகைலாயத் தலமும் கேது ஸ்தலமுமான ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உற்சவ மூா்த்திகளான சுவாமி-அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தீா்த்தவாரி, அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு வழிபாடுகளை லட்சுமண சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.