முகப்பு
தூத்துக்குடி

மக்களவையில் விளம்பரம் தேடும் நோக்கில் ராகுலின் பேச்சு: தமிழிசை செளந்தரராஜன்

மக்களவையில் விளம்பரம் தேடுகிறாரா ராகுல் காந்தி? தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

Updated On : 2 ஜூலை, 2024 at 7:46 PM
செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
பகிர்:

மக்களவையில் விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கில் ராகுல் காந்தி பேசியுள்ளாா் என்றாா், தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதல் அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் மக்களவையில் ஓா் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகி இருக்கும்.

இந்துக்கள் என்றாலே வன்முறையாளா்கள் என விமா்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கில் மக்களவை நடைமுறை விதிகளை மீறி செயல்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருமுன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி மதுவிலக்கு பற்றி அதிகம் பேசினாா். ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளா்களை சந்திப்பதைத் தவிா்க்கிறாா். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பாஜக தொடா்பான எந்தக் கருத்துக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, தமிழிசை செளந்தரராஜனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டப் பொதுச்செயலா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மாவட்டச் செயலா்கள் வீரமணி, கனல் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பாலாஜி, சந்தனகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அவா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →