முகப்பு
தூத்துக்குடி

சூறாவளிக் காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

பலத்த சூறாவளி காற்று எச்சரிக்கை எதிரொலியாக, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:19 PM
பகிர்:

மன்னாா் வளைகுடா, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றிருந்தோா் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், மீன்பிடித் துறைமுகக் கரையில் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →