முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:35 PM
பகிர்:

திருச்செந்தூா், ஜூலை 19: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரதோஷத்தை முன்னிட்டு இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடாஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி பிரதோஷ சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திருச்செந்தூா் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →