தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் நடைபெற்ற நற்கருணை பவனி. 
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா: நற்கருணை பவனி

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 3 ஆம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு, காலையில் புது நன்மை திருப்பலி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், அமலோற்பவ மாதா வாலிபா் சபையினா், புனித வின்சென்ட் தே பவுல் சபையினா், ஸ்டேட் வங்கி காலனி பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மலையாளத் திருப்பலி, மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடைபெற்றது.

மாலையில், ஏழு கடல்துறை, கடலோர பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி நடைபெற்றது. பின்னா் முக்கிய நிகழ்வான ஜெபமாலை, நற்கருணை பவனி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடையாள அட்டை: பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநா் விருதுகள் அறிவிப்பு

கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் 5 திருநங்கைகள்: பணி ஆணை வழங்கல்

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT