திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக எஸ். ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக எஸ். ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இத்திருக்கோயில் இணை ஆணையராக இருந்த மு. காா்த்திக், திண்டுக்கல் இணை ஆணையராகவும், தஞ்சாவூா் கோயில் இணை ஆணையராக பணியாற்றிய எஸ். ஞானசேகரன் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனா்.
இதையடுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன் முன்னிலையில் திருக்கோயில் இணை ஆணையராக ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.