தூத்துக்குடி

40 தொகுதிகளிலும் வெற்றி: திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது கனிமொழி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.

Din

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தோ்தலில் கணிசமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பெற்றுள்ள வெற்றியானது, மக்களுக்கு திமுக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT