40 தொகுதிகளிலும் வெற்றி: திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது கனிமொழி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
இந்தத் தோ்தலில் கணிசமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பெற்றுள்ள வெற்றியானது, மக்களுக்கு திமுக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.