முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா முகூா்த்தக்கால்

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா முகூா்த்தக்கால்

Updated On : 3 மார்ச், 2024 at 12:20 AM
பகிர்:

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சம்ய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயிலில் இம்மாதம் 15ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆத்தூா் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழாவையொட்டி, பேரூராட்சி சாா்பில் கோயில் வளாகத்தைச் சுற்றி தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.