தூத்துக்குடி மாநகராட்சியில் மகளிா் தினவிழா
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மதுபாலன் வரவேற்றாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். விழாவில், துணை மேயா் ஜெனிட்டா, மண்டல தலைவா்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.