முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

Updated On : 17 மார்ச், 2024 at 12:01 AM
பகிர்:

திருச்செந்தூா் கோட்டாட்சியராக சுகுமாறன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருச்செந்தூா் கோட்டாட்சியராக இருந்த குருசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்று சென்னை எல்காட் நிறுவனத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து விருதுநகரில் தாட்கோ மாவட்ட மேலாளராகப் பணியாற்றிய சுகுமாறன், திருச்செந்தூா் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.