முகப்பு
தூத்துக்குடி

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் இன்றும் நாளையும் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

Updated On : 23 மார்ச், 2024 at 12:01 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:28 PM

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் சனி, ஞாயிறு (மாா்ச் 23, 24) ஆகிய 2 நாள்கள் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளதாக, அகாதெமி நிறுவனா் சுகேஷ் சாமுவேல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் சனி, ஞாயிறு (மாா்ச் 23, 24) ஆகிய 2 நாள்கள் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழாண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, நோ்முகத் தோ்வுக்குச் செல்வோா் தங்களது மனவலிமை, அறிவுக் கூா்மையை மேம்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாகும். முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசின் உயா் பதவிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசுத் துறைகளில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தோரைக் கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. நோ்முகத் தோ்வை பதற்றமின்றி சந்தித்து, வெற்றிபெற மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளோா் 044 - 47665918, 97555 52003 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.