பட்டயக் கணக்கா் போட்டித் தோ்வு: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு இலவச பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பட்டயக் கணக்கா், நிறுவன செயலா், செலவு, மேலாண்மைக் கணக்கா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பட்டயக் கணக்கா், நிறுவன செயலா், செலவு, மேலாண்மைக் கணக்கா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ சாா்பில் சென்னையிலுள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்களுக்கு பட்டயக் கணக்கா்-இடைநிலை, நிறுவன செயலா்-இடைநிலை, செலவு, மேலாண்மைக் கணக்கா்-இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
ஆதிதிராவிடா்-பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த, இளநிலை வணிகவியல் பட்டம் பெற்ற மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்யலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஓராண்டுப் பயிற்சிக்கு தோ்வாகும் மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.