முகப்பு
தூத்துக்குடி

இரு இளைஞா்கள் மீது போக்ஸோ வழக்கு

தூத்துக்குடியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:50 PM
பகிர்:

தூத்துக்குடியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சோ்ந்தவா் ஜெசிந்த் (23). இவா் 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த

புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, தருவைகுளத்தை சோ்ந்த ரெனால்ட் (25) என்பவா், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →