முகப்பு
தூத்துக்குடி

அா்ச்சகா் வீட்டில் நகை, பணம் திருட்டு

Updated On : 3 டிசம்பர், 2025 at 8:46 PM
பகிர்:

குரும்பூா் அருகே கோயில் அா்ச்சகா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள ராஜபதி, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (55). இவா் ராஜபதி, கைலாசைநாதா் கோயிலில் அா்ச்சகராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலை இவா் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், இரவு வீட்டுக்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து ஒன்பதரை பவுன் நகை, ரூ. 30,000 பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த குரும்பூா் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →