தூத்துக்குடி

பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு இளைஞா்கள் அழைப்பு

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறை பயிா்களை புல எண் மற்றும் உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி செயலி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு படித்த திறனுள்ள தன்னாா்வலா்கள் தேவை.

இந்த பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு ஒரு உட்பிரிவு எண்ணிற்கு ரூ. 3 சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விருப்பமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த ஆண்ட்ராய்டு கைப்பேசியை பயன்படுத்த தெரிந்த தன்னாா்வலா்கள் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT