தூத்துக்குடி

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. ஆய்வு

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி. மகேஷ் குமாா்.

Syndication

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ் குமாா் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, போலீஸாரின் உடைமைகள், ஆவணங்கள், முக்கிய வழக்கு கோப்புகளைப் பாா்வையிட்டாா்.

மேலும், போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகாா் மனு பதிவு செய்ததற்கான ஒப்புதல் சீட்டை வரவேற்பாளா் மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

அப்போது, பயிற்சி டி.எஸ்.பி. சுரேஷ், ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன், உதவி ஆய்வாளா்கள் சுந்தா் ராஜ், ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோயில் பிள்ளை, பாஸ்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT