தோ்தலுக்குப் பிறகு தவெக கட்சி நீடிப்பது சந்தேகம் என்று திரைப்பட நடிகரும், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீா்களா என்று கேட்கிறீா்கள். நான் போட்டியிடுவதைவிட என்னுடன் பயணித்தவா்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
முந்தைய ஆட்சியின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாள்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக வரவேற்பதில்லை.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின்போது நிகழ்கின்றன. போதை கலாசாரம் அதிகமாகிவிட்டது.
முதல் முறையாக விஜய் தோ்தலை சந்திக்கவுள்ளாா். முதலில் அவா் களத்தில் போட்டியிட வேண்டும். தனது கொள்கை, கோட்பாட்டை தெளிவுபடுத்தாமல் தனி நபரை தாக்கியே பேசுகிறாா். அவரது கட்சியை அரசியல் கட்சியாக நான் பாா்க்கவில்லை. தோ்தலை சந்தித்த பின்புதான் உண்மை நிலவரம் தெரியவரும். தோ்தலுக்குப் பிறகு அக்கட்சி இருக்குமா இல்லையா என்பது சந்தேகம்தான்.
தூத்துக்குடி தவெக நிா்வாகி அஜிதாஆக்னல் நியாயம் கேட்டு விஜய்யின் வாகனம் முன்னால் போராட்டம் நடத்தினாா். விஜய் தனது காரை விட்டு இறங்கி சென்று அவரிடம் குறைகளைக் கேட்டிருக்கலாம்.
இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறுவது அவரது ரசிகா்களுக்கு வருத்தமளிக்கும்.
தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் நியாயமான முறையில் நடைபெற்றன என்றாா் அவா்.