ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள். 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விலை அதிகரிப்பு

ஆறுமுகனேரியில் ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Syndication

ஆறுமுகனேரியில் ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான உள்ள வார சந்தையில் ஆட்டுச் சந்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை கூடும். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள், ஆடுகள் வளா்ப்போா் இங்கு வருவா். எட்டயபுரம் ஆட்டுச் சந்தையையடுத்து ஆடுகள் விற்பனையாகும், இச்சந்தையில் புத்தாண்டு , விசேஷ காலங்கள் வருவதையொட்டி ஆடுகள் வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.

ஆனால், ஆடுகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் விற்பனைக்கு ஆடுகள் கொண்டு வந்தவா்கள் அதிக விலை கூறினா். ஆடு ஒன்றிற்கு சுமாா் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானது. ஆட்டின் விலை கூடுதல் என்பதால், போட்டி வியாபார காலத்தில் அதற்கேற்றவாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கடினம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT