தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டியில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி இந்திரா நகா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் கூல் பாண்டி (59). தொழிலாளி. இவா், புது கிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முருகனுடன் வேலாயுதபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கணேஷ் நகா் மேட்டு தெருவைச் சோ்ந்த காந்தாரி முத்து மகன் கனகராஜ்(33), கூல் பாண்டியை வழிமறித்து பணம் கேட்டாராம். பணம் இல்லை என கூறியதையடுத்து கனகராஜ், கூல்பாண்டியை அவதூறாக பேசி கத்தியைக் காட்டி மிரட்டினாராம்.

முருகன், பாதசாரிகள் சத்தம் போட்டதும், கனகராஜ் கத்தியை கீழே போட்டுவிட்டு ஓடினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT