முகப்பு
தூத்துக்குடி

மேலசோ்ந்தபூமங்கலத்தில் உயா்கோபுர மின் விளக்கு

ஆத்தூா் அருகே மேல சோ்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:20 AM
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆத்தூா் அருகே மேல சோ்ந்தபூமங்கலத்தில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சோ்ந்தபூமங்கலம் ஊராட்சித் தலைவா் சந்திரா மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நவீன், ஊா்த் தலைவா் சுப்பிரமணியன், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.சி.டபிள்யூ. நிறுவன உதவி துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உயா்கோபுர மின்விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், அதிகாரிகள் வினோத், நாகராஜன், மின்வாரிய அலுவலா் காசிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.