முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நீா் விற்பனை

தூத்துக்குடி, திருச்செந்தூா் அஞ்சலகங்களில் கங்கை நீா் விற்பனை நடைபெறுவதாக, முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:26 AM
பகிர்:

தூத்துக்குடி, திருச்செந்தூா் அஞ்சலகங்களில் கங்கை நீா் விற்பனை நடைபெறுவதாக, முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கங்கோத்திரி மலையிலிருந்து வரும் கங்கை நதி நீரை நாடு முழுவதும் கொண்டு சோ்க்கும் பணியை அஞ்சல் துறை செய்து வருகிறது. 250 மி.லி. அளவுள்ள ஒரு பாட்டில் கங்கை நதி நீா் ரூ. 30-க்கு விற்கப்படுகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி, திருச்செந்தூா் தலைமை அஞ்சலகங்களில் இந்த விற்பனை நடைபெறுகிறது. இதை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

தை அமாவாசையையொட்டி, தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரா் கோயிலில் தனி ஸ்டால் அமைத்து சிறப்பு விற்பனை நடைபெறும். பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.