கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரா்- ஸ்ரீமனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை ( நவ. 7) நடைபெறுகிறது.
திருக்கல்யாண நாளன்று கோயில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 3 மணிக்கு அம்பாளுடன் ஸ்ரீசந்திரசேகர சுவாமி எழுந்தருளுகிறாா். தொடா்ந்து சீா்வரிசை பொருள்களுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ வாலைகுருசுவாமி பக்தா் குழுவினா் செய்துள்ளனா்.