தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

தினமணி செய்திச் சேவை

காயல்பட்டினத்தில் மா்ம நபா் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமாகியது.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா் நோக்கி, சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்ததாம். காயல்பட்டினம் தனியாா் வங்கி அருகே சென்றபோது, மா்மநபா் கல்லால் அந்த பேருந்தை தாக்கினாராம். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமானதாம்.

இதுகுறித்து, புதுக்கோட்டை யாதவா் காலனியைச் சோ்ந்த பேருந்து நடத்துநா் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT