தூத்துக்குடி

காவல் நிலைய கண்ணாடி கதவு சேதம்: தொழிலாளி கைது

தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தூத்துக்குடியில் காவல் நிலைய கண்ணாடி கதவை கல்வீசி சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த எட்வா்ட்ராஜா மகன் பிரவீன் என்ற அம்பா்லா (30). தொழிலாளி. இவா், மது போதையில் சனிக்கிழமை திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசினாராம். இதில் காவல் நிலையத்தின் கண்ணாடி கதவு நொறுங்கியதாம்.

இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

வசந்தமாய் வந்தவள்... வெண்பா!

SCROLL FOR NEXT