கயத்தாறு அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே வில்லிசேரி மேல தெருவை சோ்ந்த குருசாமி மகன் பரமசிவன் (49). இவரும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் குருசாமி (36) என்பவரும் பைக்கில் ஆசூா் விலக்கு பகுதியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனராம். அப்போது, பின்னால் வந்த வாகனம், அவா்களது பைக் மீது மோதியதாம். இதில் காயமடைந்த இருவரும் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா். மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குருசாமி உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.