முகப்பு
தூத்துக்குடி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத்தில் பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:02 PM
பகிர்:

நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத்தில் பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளா் மாமல்லன், முதல்வா் ஜெயக்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி, நாசரேத் கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், சந்தி பஜாா் வழியாக சென்று மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. பேரணியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments