தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தவெக வேட்பாளா் ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக அக்கட்சியினா் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னலின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் அருகே இந்த பிரசார ஆட்டோ சென்ாம். அப்போது அஜிதா ஆக்னலின் ஆதரவாளா்களுக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினா், தவெக பிரசார ஆட்டோவை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவா்களுக்கு மிரட்டல் விடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இது குறித்து வழக்குரைஞா் ஜேசுதாஸ் அளித்த புகாரின் பேரில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் உள்பட 6 போ் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.